தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவற்றில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் ஜெயிலர் படத்தில் இணைந்து உள்ளார்.

இத்திரைப்படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஜெயிலர் படப்பிடிப்பிற்காக ரஜினி ஐதராபாத் சென்று உள்ளார். இந்தநிலையில் ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி மற்றும் தேசம் கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவை ரஜினி ஐதராபாத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.