மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் வருடம் வெளியாகிய “பிரேமம்” படம் வாயிலாக மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் தான் நடிகை சாய் பல்லவி. இதையடுத்து விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய கார்கி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது சாய் பல்லவி தெலுங்கில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் நீலகிரி கோத்தகிரியில் அமைந்துள்ள படுகர் இனத்தின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்டுள்ளார். அங்கு குடும்பத்தினருடன் சாய் பல்லவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.