தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சுருதிஹாசன் தன் குணநலன், வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். இது தொடர்பாக சுருதிஹாசன் பேட்டி அளித்ததாவது ”எனக்கு மன ரீதியாக சில பிரச்சினைகள் இருக்கிறது. இதனால் அதிகமாக உணர்ச்சிவசப்படுவேன். சிறு விஷயத்துக்கும் பொறுமை இழந்து கோவப்படுவேன்.

முதலில் என் பிரச்சினைகள் பற்றி பேச பயந்து இருந்தேன். இதையடுத்து பலர் தங்களுக்குள் இருக்கும் மன ரீதியான பிரச்சினைகளை பேச ஆரம்பித்த பின் எனக்கும் வெளியே சொல்லலாம் என தோன்றியது. மன ரீதியான ஆரோக்கியத்துக்காக சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறேன். இசை கூட என் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு வழி தான்.

தற்போதும் நினைத்தது நினைத்தபடி நடக்கா விட்டால் படப்பிடிப்பு தளத்திலும் சரி வீட்டிலும் சரி உடனே மனஉளைச்சலுக்கு ஆளாகி விடுவேன். நிலைமை தீவிரமாகிறது என தோன்றினால் உடனே தெரபி சிகிச்சைக்கு செல்கிறேன். ஒருமுறை பிரச்சனையை பேசி பாருங்கள் மனதில் உள்ள பாரம் கண்டிப்பாக குறைந்து விடும். மேலும் தீர்வுக்கான வழியும் கிடைக்கும். ஆகவே பிரச்சினை எதுவாக இருந்தாலும் மனம் திறந்து பேசுங்கள்” என்று அவர் பேசினார்.