தமிழ் சினிமாவில் “தி லெஜண்ட்” படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தலா. இவர் இந்தியில் அதிகமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதற்கிடையில் இவர் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் என்பவரை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரம் ஊர்வசி ரவுத்தலா சில சமயங்களில் ரிஷப் பண்ட்டை விமர்சிக்கும் வகையிலும், சில நேரங்களில் ஆதரவு தெரிவிக்கும் அடிப்படையிலும் நேரடியாக மற்றும் மறைமுகமாக சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கார் விபத்தில் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். அதன்பின் உத்தரகாண்டிலுள்ள டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரிஷப், மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இதனிடையில் முன்னதாக மும்பையில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் புகைப்படத்தை ஊர்வசி ரவுத்தலா தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் மும்பையில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை புகைப்படத்தை ஊர்வசி ரவுத்தலாவின் தாயார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதோடு “அனைத்தும் சரியாகிவிடும், கவலைப்படாதே ஊர்வசி” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், ஊர்வசி தாயார் மீனா விபத்தில் காயமடைந்து ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.