ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை நிறுவுவதற்கான அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெறப்படவில்லை என்று ஹைகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிலைக்கு அருகே கட்டடங்கள் கட்டுவதை எதிர்த்து மலை பழங்குடியின பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரணை செய்த தலைமை நீதிபதி அமர்வு கோவை நகர திட்ட இயக்குனர் ஆய்வு செய்யவும் அதில் அனுமதி பெறாதது உறுதியானால் உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.