இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒரு ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டு வேண்டுமானாலும் பெறலாம் என்பதால் தவறான பயன்பாடுகளை தவிர்ப்பதில் சிக்கல் நிலவுகிறது.

இதனால் உங்கள் ஆதார் எண்ணை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியுங்கள். அதற்கு மத்திய அரசின் https://www.sancharsaathi.gov.in/என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களுடைய மொபைல் எண்ணை லாகின் செய்ய வேண்டும். அதில் உங்கள் ஆதாருடன் அறியப்படாத மொபைல் எண்கள் இருந்தால் புகார் அளிக்கலாம்.