திரிபுரா மாநிலத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். இதில் முக்கிய மந்திரி விளையாட்டு மேம்பாட்டு திட்டம், சாதனையாளர்களுக்கு ஊக்கத்தொகை, ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி, கால்நடை வளர்ப்பு துறை குறித்த முக்கிய அறிவிப்பு மற்றும் மீன் விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சி உள்ளிட்ட 13 முக்கிய திட்டங்கள் குறித்து முன்மொழிக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு வருடமும் ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக ஆண்டுக்கு 589 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 100 மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இலவச ஸ்கூட்டி வழங்க முக்கிய மந்திரி கன்யா ஆத்ம  நிபுணர் யோஜனா என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.