இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகிறார்கள். குறிப்பாக பாதுகாப்பான திட்டத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் திட்டங்களில் மக்கள் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் விதமாக இந்திய தபால்துறை ரிஸ்க் இல்லாத திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அதன்படி தொடர் வைப்புத் தொகை திட்டத்தில் 6.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகை ஏற்ப திட்டத்தின் முடிவில் பயன்பெற முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் செலுத்தி தொடர் வயிற்று தொகை கணக்கு திறந்தால் மெச்சூரிட்டி தொகையாக 1,41,983 ரூபாய் கிடைக்கும்.அதனைப் போலவே ஒரு வருடத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் ஐந்து வருடத்திற்கு மெச்சூரிட்டி தொகையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இந்த தொகையுடன் வட்டி மட்டுமே 21 ஆயிரத்து 983 ரூபாய் வழங்கப்படும். அதே சமயம் 3 ஆயிரம் ரூபாய் வாய்ப்புத் தொகையாக செலுத்தி வந்தால் திட்டத்தின் முடிவில் 2,12,971 கிடைக்கும். இவ்வாறு உங்களின் சேமிப்பு தொகையை பொறுத்து மெச்சூரிட்டி தொகை மாறுபடும்.