டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது.அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தாளுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டுக்கான கணினி வழி தேர்வு வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கு மொத்தம் 4,01,885 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தாள் உன்னில் முறைகேடு மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யாத கையொப்பம் போடாத 30 பேர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.