இலங்கை, இந்தியாவில் உள்ள பக்தர்கள் சங்கமிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு வருடமும்  மார்ச் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு  கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வரும் மார்ச்3,4 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டாலும் இந்த ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இருநாட்டு மக்களும் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து 3,500 பேரும் இலங்கையில் இருந்து 5,000 பேரும் திருவிழாவில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.