தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஓய்வு பெற்ற, பணியாற்றி உயிரிழந்த ஆசிரியர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி மற்றும் பட்டப் படிப்பு போன்ற உயர் கல்வி பயில கல்வி கட்டண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேர்வு குழு தேர்வு செய்யும் தகுதி உள்ள ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தொழில் கல்வி பட்டப்படிப்பு படிக்க கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை அல்லது 50,000 ரூபாய், தொழிற்கல்வி டிப்ளமோ படிக்க கல்லூரிகள் நிர்ணயம் செய்யும் தொகை அல்லது 15000 ரூபாய், இதில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.