திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகரஜோதி ஏற்றப்படும். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த விளக்கானது எரியும். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 25 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை 695 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, திருச்சி மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் எனவும் பேருந்துகளில் பயணம் செய்ய திட்டமிடுவோர் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.