விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற குற்ற செயல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக நாகை ஒன்றியம் சிக்கல் கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு ஒன்றிய தலைவர் விமலா தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாதர் சங்க மாவட்ட பொருளாளர் சுபா தேவி, ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, மாலா, தெற்கு ஒன்றிய தலைவர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.