மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்ட்ரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப். 7ம் தேதிகளில் இரவு 9 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில் (வண்டி எண்.06046) அடுத்த நாள் காலை சென்னை சென்ட்ரல் வந்தடையும். மார்க்கமாக ஆக.25, செப்.1, 8 தேதிகளில் சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது