ஆந்திராவில் ஆசையாக முத்தம் கொடுக்க வந்த கணவனின் நாக்கை கடித்து குதறிய  சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவருக்கும் புஷ்பாவதி  என்பவருக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆரம்பத்தில் இவர்களுடைய  வாழ்க்கை நல்ல சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஏனெனில் தாராசந்த் எப்பொழுதும் மனைவியை சந்தேகப்பட்டு கொண்டு சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று  கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  வீட்டை விட்டு கோபமாக வெளியே சென்ற தராசந்த்  சில மணி நேரம் கழித்து வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது கோபமாக இருந்த தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்துவதற்காக புஷ்பாவதியின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். அப்பொழுது புஷ்பவதி விலக முயன்றும் அவரை விடாப்பிடியாக பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி முத்தம்  கொடுத்து கொண்டிருக்கும் பொழுது கணவன் நாக்கை நறுக்கென்று கடித்து நாகை துண்டாக்கி உள்ளார். இதனை அடுத்து தன்னுடைய மனைவி மீது கணவர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவியுடன் வாழவே தனக்கு பயமாக உள்ளதாகவும் அவரால் உயிருக்கு ஆபத்து என்றும் புகார் கொடுத்துள்ளார்.