தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகர பேருந்தில் பயணி ஒருவரை நடத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அதாவது 29 ஆயிரத்து 210 ரூபாய் என்று அச்சிடப்பட்ட டிக்கெட் ஒன்றை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை இஷ்ணா பூரிலிருந்து செகந்திராபாத் செல்லும் பேருந்தில் ஒருவர் ஏறி பால நகருக்கு டிக்கெட் கேட்டுள்ளார். அவருக்கு நடத்துனர் 29 ஆயிரத்து 210 ரூபாய் என அச்சிடப்பட்ட ஒரு டிக்கெட்டை வழங்கினார். இது தொடர்பாக பயணி கேட்டபோது சாப்ட்வேர் பிரச்சனை என்று கூறி மற்றொரு டிக்கெட்டை நடத்தினர் கொடுத்துள்ளார். இந்த டிக்கெட் பற்றிய புகைப்படம் தற்போது இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.