சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. தினந்தோறும் செல்லப்பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படி வெளியாக கூடிய செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் சில சமயங்களில் நமக்கு வியப்பை ஏற்படுத்தும்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் ஒரு குரங்கு நாற்காலியில் அமர்ந்து தட்டில் இருந்து எதையோ சாப்பிட்டு கொண்டு இருக்கிறது. அப்போது ஒரு கோழி எதிரே நின்று குரங்கின் கையில் இருந்து உணவை சாப்பிட்டதால் அதிர்ச்சி அடைந்த குரங்கு கோழியின் வாயிலிருந்து உணவை பிடுங்குகிறது. தற்போது இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.