தேசிய விருது பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. அவருடைய மெழுகு சிலையில் பிளாக்பஸ்டர் படமான புஷ்பா தி ரைஸ் படத்தில் உள்ள புஷ்பராஜின் தோற்றம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துபாயில் நடந்த விழாவில் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.