‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தில் நடித்திருந்த நடிகர் சேது 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மனைவி உமா இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ”அப்பா எப்போது வருவார்? அவரை நாம சர்ப்ரைஸ் செய்யலாம்’ என சஹானா (மகள்) கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அவளுக்கு தெரியாது… அப்பா வந்தால் தானே என்று… அவளும் நானும் நிச்சயம் ஒருநாள் சொர்க்கத்தில் உங்களை சந்திப்போம். அதுவரை எங்களை வழிநடத்திக் கொண்டே இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.