தமிழ்நாட்டில் இன்று முதல் 19ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, பிற்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரை சிறுவர்கள், கர்ப்பிணிகள். முதியோர் வீட்டை வெளியேற வேண்டாம் என எச்சரித்துள்ளது. தண்ணீர், இளநீர், மோர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கவும்.

மேலும் ஏப்ரல் 19ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள