தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு ஆனது மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் அடையாளமாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளதாக அமைச்சர் மா.சு பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் 2008ல் கலைஞர் தொடங்கி வைத்தது முதல் தற்போது வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் 1.46 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். 2008ல் 200 வாகனங்களோடு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் தற்போது 1,353 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது என்றார்.