திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த வேன் ஓட்டுநரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.