தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெலுங்கானா மாநிலத்தின் அரசு பேருந்துகளுக்குள் ஏறி அதிலிருந்து பெண் பயணிகளிடம் பாத்திரங்கள் ஏந்தியும் கை நீட்டியும் பிச்சை கேட்டும் போராட்டம் நடத்தினர். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூட வருமானம் இல்லை என்றும் குழம்பி வருகிறார்கள்.