குஜராத் மாநிலம், ஜெத்பூர் நகரில் தனது தாயின் காதலனை, நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதால், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரம்பகட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட நபருக்கும் குற்றம் சாட்டப்பட்டவரின் தாய்க்கும் இடையே இருந்த உறவு தொடர்பான தனிப்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குடும்பப் பின்னணி மற்றும் அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவின் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
A man has been arrested for allegedly killing his mother’s live-in partner by repeatedly stabbing him in Gujarat’s Rajkot district. The incident took place on Tuesday, July 7, with multiple onlookers present.
The killing was captured on a nearby CCTV camera. The victim has been… pic.twitter.com/i6V1q4D7P2
— Hate Detector 🔍 (@HateDetectors) July 9, 2026
“>
பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் தடயவியல் சான்றுகள் திரட்டப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிந்தவுடன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பொதுமக்கள் எவ்வித வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
