சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களின் செயல்பாடு மற்றும் உணவுகள் குறித்து பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2.13 லட்சம் பேர் தங்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மதிய உணவு வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சாலை உணவாக இட்லி, மதியம் கலவை சாதம்,இரவு சப்பாத்தி என மலிவு விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அம்மா உணவகம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் மதிய உணவு வகைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பாக அரசு ஆலோசித்து விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.