தமிழகத்தில் வருகின்ற மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும்.

இதற்கு ஆசிரியர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே மூன்றாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான ஆசிரியர்கள் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது மே 15 முதல் மே 26 ஆம் தேதி வரை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.