தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் நலனுக்காக அரசு அவ்வபோது பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு 4 லிட்டராக உயர்த்த தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்ததாக கூறி ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 4 லிட்டராக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மண்ணெண்ணெய் அளவு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.