தாய்மையின் வலிமையையும், ஒரு தாய் தன் பிள்ளைக்காகப் படும் கஷ்டத்தையும் சொல்லும் ஒரு உருக்கமான வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு ஏழைத் தாய் தனது கைக்குழந்தையை ஒரு துணிப் பையில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, அதைத் தனது தோளில் சுமந்தபடி வேலைக்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
एक भावुक कर देने वाला वीडियो सामने आया, जहां एक मां अपनी मासूम को झोले में लेकर काम पर निकली। यह वीडियो सोशल मीडिया पर वायरल।#MothersLove #ViralVideo pic.twitter.com/MHpDdahGRD
— NBT Hindi News (@NavbharatTimes) May 2, 2026
வறுமை ஒரு பக்கம் வாட்டினாலும், தனது குழந்தையைப் பிரிந்து இருக்க முடியாமலும், அதே சமயம் அக்குழந்தையைப் பராமரிக்க வேறு வழியில்லாமலும் அந்தத் தாய் படும் போராட்டத்தைப் பார்த்து நெட்டிசன்கள் கண்கலங்கிப் போயுள்ளனர்.
“உலகிலேயே மிகப்பெரிய போராளி அம்மாதான்” என்றும், “இந்த அன்பிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை” என்றும் சமூக வலைதளங்களில் பலரும் அந்தப் பெண்ணின் விடாமுயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
பார்ப்பவர் எவரையும் ஒரு நிமிடம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் இந்த வீடியோ, உழைக்கும் பெண்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.
