அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று உதயநிதி பேசியதை கண்டித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சனாதன விவகாரத்தில் நான் அழிக்க வரலை. ஒழிக்க வந்துருக்கோம் என்றார். அவருடைய மொழி எப்போதும் அப்படிதான். பெரிய தமிழ் அறிஞரின் பேரன் இப்படி பேசலாமா என்று கேள்வி எழுப்பினார். அப்பன் என சொல்வது கெட்ட வார்த்தையா என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்பன் என்பது கெட்ட வார்த்தையா நான் நாகரீகம் இல்லாமல் எதையும் பேசவில்லை. அப்பா என்பது கெட்ட வார்த்தையாக இருந்தால் மரியாதைக்குரிய நிதியமைச்சரின் அப்பா என்று சொல்லிக் கொள்கிறேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. எனக்காக நான் மத்திய அரசிடம் நிதி கேட்கவில்லை தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் கேட்கிறோம் என அவர் தெரிவித்தார்.