விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் பெங்களூருக்கு சென்றுள்ளனர். இந்த ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது பற்றி சிபிசிஐடி எஸ்.பி.அருண் கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட குழுவினர் மற்றும்  நான்கு தடவியல் குழுவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாயமான 16 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே மற்றொரு  ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி, ஏ.டி.எஸ்.பி கோமதி தலைமையிலான போலீசார் பெங்களூருக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.