மேற்குவங்க மாநிலத்தில் 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் விரைவில் 8-வது ஊதிய குழு ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுவதால் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது