மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் தல 600 ரூபாய் வழங்கப்படும் என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாநிலத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் 5.25 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வாங்க உதவியாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக 600 ரூபாய் பணம் செலுத்தப்படும். இந்த திட்டம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.