ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசானது தகவல் தெரிவித்துள்ளது. அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறைக்கு வழங்கி இருக்கிறது.

அருங்காட்சியகத்தை கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். பணிகளை மிக வேகமாக முடிக்கும் வகையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது. தமிழக எம்பிக்கள் கனிமொழி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போன்றோர் எழுத்துப்பூர்வ கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.