மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ளது வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி. இந்த பள்ளியில் தான்  பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா 1941 முதல் 1945(1 முதல் 4) வரை படித்துள்ளார். ஆனால் இந்த பள்ளி தற்போது பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக இருக்கிறது, அதில் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் பாப்பையா தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கியியுள்ளார்.

இதனையடுத்து மாநகராட்சி பள்ளிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய சாலமன் பாப்பையாவுக்கு MP சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். ‘தனக்குப் பயன்தந்து இன்பமூட்டிய கல்வியை வழங்கிய வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி இன்னும் பல்லாண்டுகள் நீடித்துநின்று பலருக்கும் கல்விப் பயனை நல்க வேண்டும் என்று விழைந்து அப்பள்ளிக்கு 20 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி ஐயா சாலமன் பாப்பையாவிற்கு நன்றியும் பாராட்டுகளும்’ என கூறியுள்ளார்.