நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை விறுவிறுப்படைந்துள்ளது. நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு அதிக அளவில் செல்வாக்கு இருக்கின்றது. அங்கு எப்படியும் பாஜக வெற்றி பெறும் என ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்த நிலையில் நெல்லை தொகுதி திமுக வேட்பாளரின் அணுகுமுறை கொஞ்சம் சரியில்லை, இந்த நாள் அந்தத் தொகுதி தான் டவுட்டாக இருக்கிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓபன் ஆக பேசியுள்ளார்.