தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பரப்புரையை தீவிர படுத்தியுள்ளன. இந்த நிலையில் இன்று காலை தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இது தேர்தல் நேரம் என்பதால் பெண்களின் வாக்குகளை குறிவைத்து தற்போது மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்பட்டதை திமுக தனது தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தியுள்ளது.