மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாத நிலையில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போதுமான இட வசதி, பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி செய்ய வசதி இல்லாததை சுட்டிக்காட்டி தங்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் அல்லது ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது பேட்டியளித்த மாணவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.