இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தினம் இன்று டெல்லியில் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு வீரர்களின் பெயர்களை சூட்டினார். அதன்படி அந்தமான் நிக்கோபாரில் உள்ள மிகப்பெரிய தீவுக்கு பரம்வீர் சக்ரா விருதை பெற்ற வீரரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோன்று இரண்டாவது பெரிய தீவுக்கு இரண்டாவது பரம்வீர் சக்ரா விருதை பெற்றவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதன்படி விக்ரம் பத்ரா, ராமசாமி பரமேஸ்வரன், மனோஜ் குமார் பாண்டே ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து அளவில் உள்ள தீவுகளுக்கு தொடர்ந்து பரம்வீர் சக்ரா விருதுகளை பெற்ற வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சோம்நாத் தீவு, மனோஜ் பாண்டே தீவு, சேத்திர பால் தீவு, சஞ்சய் தீவு உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையில் கட்டப்பட்ட தேசிய நினைவகத்தின் மாதிரியியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.