உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கிஷோரி என்ற இளம்பெண் ரிங்கு என்ற பையனை காதலித்துள்ளார். காதல் விவகாரம் தெரிந்ததும் கிஷோரியின் பெற்றோருக்கு வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் வயலுக்கு புல் வெட்டச் சென்ற காதலியை சந்தித்த ரிங்கு, கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தைப் பார்த்து, கோபத்தில் பெண்ணின் கைவிரல்களுடன் மணிக்கட்டையும் அறுத்துள்ளார். அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.