சென்னையில் இருந்து மைசூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் சென்ற இளம் பெண்கள் குழு ஒன்று பாடல்களை பாடி அசத்திய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே சமயம் அந்த பெண்களையும் பலர் கண்டித்து வருகிறார்கள். இந்த வீடியோவை தெற்கு ரயில்வே தன்னுடைய X தளத்தில் பதிவேற்றி உள்ளது. அதனைப் பார்த்த பயனர்கள் பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். வந்தே பாரத் ரயிலில் குழுவாக பயணிக்கும் பெண்கள் மஞ்சுமல் பாய்ஸ் கேங் போல மஞ்சுமல் கேர்ள்ஸ் கேங் ஆக மாறி பாடி அசத்தியுள்ளனர்.