வங்கதேச நாட்டின் காப்கான் பாலம் பகுதியில் கார், ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜலகதி மாவட்ட எஸ்பி அஃப்ருசுல் ஹக் துதுல் தெரிவித்தார். ஃபரித்பூரில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு பயங்கர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் கடந்த 10 நாட்களில் நடந்த விபத்துகளில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.