120 பெண்களை பாலியல் வன் புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்த ஜிலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என நீதிமன்றமானது அறிவித்துள்ளது.

அரியானா தோஹானா மாவட்டத்திலுள்ள பாபா பாலகினாத் கோவில் குருக்களாக இருந்து வந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா. இவர் மேல் பாலியல் குறித்த வழக்குகள் பல இருந்தது. ஜிலேபி பாபா பற்றி காவல்துறையினர் கூறியிருப்பதாவது, ஜிலேபி பாபா ஒரு பெண்ணை பாலியல் வன் புணர்வுக்கு உள்ளாக்குவதற்கு முன் அவருக்கு போதை வஸ்துகளை கொடுத்து சுய நினைவை இழக்க செய்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

அதன்படி, அப்பெண்கள் மீது ஆவிபுகுந்து இருப்பதாக கூறி பயத்தின் காரணமாக, அவர்களை சூனிய பூஜைகளில் சுய விருப்பத்துடன் கலந்துகொள்ள வைக்கிறார். தந்திர வித்யா சடங்குகளின் போது ஜிலேபி பாபா அவர்களை மயக்கமடைய செய்து, பின் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தார். மேலும் வீடியோக்களை கசியவிட்டு விடுவதாக மிரட்டி தன்னுடன் உடலுறவில் ஈடுபடும் படி வற்புறுத்தி உள்ளார்.

இதற்கிடையில் ஜிலேபி பாபா ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் 120 பெண்களை பாலியல் வன் புணர்வு செய்யும் ஆபாச வீடியோக்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். சோதனையின் போது அவரது அறையிலிருந்து போதை மாத்திரைகள், பூஜை பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.