திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரைவு தரிசனத்தை ஆன்லைன் முறையில் முன்னதாகவே பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் விரைவு தரிசனத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. இதன்படி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஜனவரி 12-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரைக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, https://tirupathibalaji.ap.gov.in/என்ற இணையதளத்தின் மூலமாக பக்தர்கள் இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.