அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் சென்றிருந்தனர்.

அப்போது திடீரென ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் சிக்கி படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதன் காரணமாக அந்த கேளிக்கை பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.