திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
ஆட்டோ ஓட்டுனர் மாரிமுத்து என்பவர் வீட்டின் சிமெண்ட் கூரை பேருந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி விஜயலட்சுமி, மகள்கள் ஹரிணி (12), பிரதீபா (10), மாரிமுத்துவின் தாயார் சாந்தி ஆகியோர் உயிரிழந்தனர். குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.