ராஜஸ்தானை சேர்ந்த பவர்லால் மற்றும் மீனா தம்பதியினர் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி தொட்டியலில் படுக்க வைத்து விட்டு மற்றொரு குழந்தையை குளியல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது தொட்டிலில் இருந்து இறங்க முயன்ற குழந்தையின் கழுத்தில் பெல்ட் மாட்டிக் கொண்டது. இதில் மயங்கிய குழந்தையை சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.