கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நெய்வேலி சாலையில் வள்ளலார் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் பகல் வேளையில் கடைவீதிகளில் யாசகம் பெற்றும், மாலையில் வள்ளலார் தெய்வ நிலையை பெருவெளியில் தங்குவதும் வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 40 வயது மதிக்கத்தக்க நபர் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.