விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் தவிட்டுராஜ் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கிளை செயலாளர் மற்றும் நிலத்தரகர். இவர் நேற்று முன்தினம் மண் குண்டாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் தவிட்டுராஜை சுற்றி வளைத்தது. அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற நிலையில் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தவிட்டு ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்மவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தவிட்டுராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.