அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிவு அல்ல அது உட்கட்சி பூசல், அதில் நாம் தலையிட முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எந்த ஒரு இடத்திலும் எதற்காகவும் ஜாதி என்பது இருக்கக் கூடாது, பிறப்பால் எல்லோரும் சமம் என்பதை தான் நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம், அதனால் தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம். அதற்காகத்தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் என்று உதயநிதி கூறியுள்ளார்.