கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என பொதுச் செயலாளர் இ பி எஸ் அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின் அடிப்படையில் பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் நான்கு இடங்கள் கேட்டு அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கிய நிலையில் பாஜக சீட் இல்லை என கூறியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த இபிஎஸ் புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து அன்பரசனை அதிமுக வேட்பாளராக களம் இறக்கி உள்ளார். இதன் மூலம் கர்நாடகாவில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முறிந்தது உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்திலும் கூட்டணி முறியுமா என கேள்வி எழுந்துள்ளது.